சாதிய ஆணவத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை - விசிக போராட்டம்

சாதிய ஆணவத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை - விசிக போராட்டம்

Published : Jul 04, 2023, 04:59 PM IST

சாதிய ஆணவத்துடன் செயல்படும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நடுவதிலும், கொடி ஏற்றுவதிலும் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி மறுத்து சாதிய ஆணவத்தோடு செயல்படுவதாக கூறி பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நடவிடாமல் செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்.

புகார் அளிக்க செல்லும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை காவல்துறையினர் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more