நிலஅபகரிப்பில் ஈடுபட்ட இரு அதிகாரிகளை ஜெயிலில் போட வேண்டும்! - ஹெச் ராஜா ஆவேசம்!

Feb 25, 2023, 7:47 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்ற பேசினார். "அப்போது அவர், வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் கூட அதனை மீட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்குவேன்" என கூறினார். மேலும், நிலஅபகரிப்பில் தொடர்புடைய இரு அதிகாரிகளையும் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்றும் தெரிவித்தார்.