நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் அவற்றை பார்வையிட்ட சிவா நான் பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன, ஆனால் நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

திருச்சியில் நேற்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்.பி. திருச்சி சிவாவின் ஆதராவளார்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக திருச்சி சிவாவின் வீடு, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அமைச்சரின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 4 பேர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி சிவா இன்று தனது சேதப்படுத்தப்பட்ட வீடு, கார் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அழுத்தமான கட்சிக்காரன். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது மிகுந்த வேதனை அளிக்கிறது. மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

என் வீட்டில் பணியில் இருந்த மூத்த குடிமக்கள் சிலர் மிகுந்த வேதனையில் உள்ளனர். அது எனக்கு வருத்தமளிக்கிறது. பொதுவெளியில் பேசுவதற்கு என்னிடம் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால், தற்போது மனநிலை சரியில்லாத காரணத்தால் ஏதும் பேசாமல் செல்கிறேன். இது குறித்து நான் யாரிடமும் புகார் கூற விரும்பவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!
Read more