Viral Video : யானையில் வாலை பிடித்து திருகிய நபர்! பாகலை தூக்கி வீசிய யானை! - பதபதக்கும் வீடியோ!

Viral Video : யானையில் வாலை பிடித்து திருகிய நபர்! பாகலை தூக்கி வீசிய யானை! - பதபதக்கும் வீடியோ!

Published : Apr 08, 2023, 09:12 AM IST

கோவில் திருவிழாவில் யானையின் வாலை பிடித்து திருகிய நபரால், கோபமடைந்த யானை பாகனை தூக்கி வீசிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பீதியடைந்தனர்.
 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காரியம் கரும்புகோணம் தேவி கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் இரு யானைகளை
பங்கேற்க வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற காஞ்சிரங்கோடு சேகரன் என்ற யானையின் வாலை, குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் திருகியதாக கூறப்படுகிறது. இதனால் கோவம் யானை தனது முன்னால் சென்று கொண்டிருந்த பாகன் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி எறிந்துள்ளது. பின்பு கூட்டத்தில் மிரண்டு ஓடியும் உள்ளது . பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதில் மொத்தமாக ஐந்து பேர் படுகாயங்கள் அடைந்து சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

யானையின் மற்றொரு பாகனின் துரித நடவடிக்கையால் ஒரு சில மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மேலும் அந்த யானை பாகனை தாக்கும் காட்சிகளும் அதுபோல யானை மிரண்டு ஓடும் காட்சிகளும், பொதுமக்கள் அலறி அடித்து ஒடும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!