இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி இன்று காலை ஏழுமலையானை வழிபாட்டார்.

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஆந்திரா வந்தடைந்தார். ஆந்திரா வந்த பிரதமருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் இருந்து கோவில் முன்வாசலுக்கு இன்று காலை வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சம்பிரதாய முறையில் ஆன இஸ்திகாபால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலுக்கு சென்ற பிரதமர் கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றை வழிபட்டு ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் கோவிலில் உள்ள துணை சந்நிதிகளில் வழிபாடு நடத்திய பிரதமருக்கு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more