Watch : புதுவையில் செல்போன் கடையில் புதிய வகை மோசடி; கையும் களவுமாக பிடித்த கடைக்காரர்!!

Watch : புதுவையில் செல்போன் கடையில் புதிய வகை மோசடி; கையும் களவுமாக பிடித்த கடைக்காரர்!!

Published : Oct 15, 2022, 04:49 PM ISTUpdated : Oct 15, 2022, 05:26 PM IST

புதுச்சேரியில் உள்ள மொபைல் கடையில் மொபைல் வாங்கிக் கொண்டு போலி பணம் பரிவர்த்தனை மொபைல் செயலி மூலம் பணம் அனுப்பி விட்டதாக நாடகமாடிய மயிலாடுதுறை வாலிபரை கடை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

புதுச்சேரி அண்ணா சாலை உள்ள தனியார் மொபைல் கடைக்கு நேற்று முன்தினம் காலை 11:30 மணி அளவில் வாலிபர் ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார், அந்த வாலிபர் கடையில் ரூபாய் 18,000 மதிப்புள்ளான மொபைல் ஒன்றை வாங்கிக்கொண்டு பணத்தை ஜி-பே மூலம் அனுப்புவதாக கூறியுள்ளார். அதன்படி தனது மொபைல் போனிலிருந்து பணப்பரிவர்த்தனை செயலி மூலம் ரூபாய் 18,000 அனுப்பி உள்ளார். ஆனால் கடை உரிமையாளருக்கு பணம் அனுப்பியதற்கான குறுஞ்செய்தியோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் வந்ததற்கான தகவலோ எதுவும் வரவில்லை.


சந்தேகம் அடைந்து கடை உரிமையாளர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில் அவர் போலி பண பரிவர்த்தனை மொபைல் செயலின் மூலம் பணத்தை அனுப்பியதாக நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மோழையூர், மேலவளி பகுதி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும், இவர் இதே பானியில் பல்வேறு இடங்களில் மோசடி செய்வது தெரிய வந்தது. மேலும் சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!