ராகுல் காந்தியிடம் மீண்டும் விசாரணை நடத்த தயாராகும் ED

Aug 14, 2024, 11:51 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பண மோசடி தொடர்பாக ED விரைவில் விசாரணை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ED மீண்டும் அழைக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாகவும், விசாரணைக்கு அவர் தேவைப்படலாம் என்றும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க ED விரும்புகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏஜென்சி முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 2022 இல், ராகுல் காந்தி நான்கு முறை ஆஜராகி சுமார் 40 மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார். யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் அவரது பங்கு குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.