இன்ஸ்டாகிராம் ரீல் செய்வதற்காக நீர்வீழ்ச்சி அருகே நின்றுகொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக கால் இடறி ஆற்றில் விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஆறுகள் நிரம்பி வருகின்றன. புகழ்வாய்ந்த ஜோக் நீர்வீழ்ச்சி, அரசினகுடி நீர்வீழ்ச்சி போன்றவைகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில், கொல்லூர் கிராமத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசினகுடி நீர்வீழ்சியை கண்டு ரசித்துக்கொண்டிருந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக மொபைலை நண்பரிடம் கொடுத்துவிட்டு ஒரு பாறையில் ஏறி நின்று நீர்வீழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, திரும்பும் போது எதிர்பாராதவிமாக கால் இடறி ஆற்றில் விழுந்து மாயமானார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்த இளைஞரை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!