Kajal Aggarwal Post: முதன்முறையாக மகனின் போட்டோவை பகிர்ந்த காஜல் அகர்வால்.. அன்னையர் தினத்தில் உருக்கம்..

By Anu KanFirst Published May 8, 2022, 10:06 AM IST
Highlights

Kajal Aggarwal Mother's Day Post: முதன்முறையாக குழந்தையை கையில் எடுத்து, தனது மகனுடன் காஜல் அகர்வால் புகைப்படம் வெளியிட்டு உருக்கமான பதிவுடன், அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், கொஞ்ச காலத்திலேயே விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் தொழிலதிபருடன் திருமணம்:

இதையடுத்து, காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் உற்றார், உறவினர் முன்னிலையில், மும்பையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றிருந்தது.

30 வயதை கடந்தாலும், பிஸியான நடிகையாக சுற்றி திரிந்த, காஜல் அகர்வால் கர்ப்பமாக செய்தியை அவரது கணவர் கவுதம் கிச்சலு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். 

கர்ப்பமான வயிறுடன் காஜல் அகர்வால்:

கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், ஆச்சாரியா படத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிவிக்கு ஜோடியாக நடித்தார்.  இவர் கடைசியாக  நடித்த  ஆச்சாரியா படம், சமீபத்தில் படம் ரீலீசான நிலையில், படத்தில் இருந்து காஜல் அகர்வாலின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு மத்தியில், தன்னுடைய கர்ப்பமான வயிறு தெரியும் படி, புகைப்படங்கள், வீடியோக்கள், வொர்க் அவுட் வீடியோக்கள் என பலவற்றை இணையத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

 காஜல் அகர்வாலுக்கு பிறந்த ஆண் குழந்தை:

கடந்த ஏப்ரல் மாதம், நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது, இது தொடர்பான குழந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த தம்பதியினருக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி இருந்தனர்.

இதையடுத்து,  அழகில் மெழுகு சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சி குறையாமல் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். 

குழந்தையுடன் காஜல்:

இந்நிலையில், அன்னையர் தினத்தில் முதன்முறையாக குழந்தையை கையில் எடுத்து தனது மகனுடன் காஜல் அகர்வால் புகைப்படம் வெளியிட்டு, உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், அவர் எனது மகனே நீ என்னுடைய வாழ்வில் எவ்வளவு பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அன்னையர் தினத்தில் உருக்கமான பதிவு:

நான் உன்னை கைகளில்வாங்கிய போது, உன் சிறிய கையை பிடித்தபோது, உன் சுவாசத்தை உணர்ந்து போது, உன் அழகான கண்களைப் பார்த்த போது  அன்பு என்பதை உணர்ந்து கொண்டேன். நீ தான் என் முதல் குழந்தை, என் முதல் மகன், எல்லாவற்றிலும் முதலானவன் நீ, உனக்கு தாயாக பல்வேறு விஷயங்களை உனக்கு கற்று தருவேன். 

இருந்த போதிலும், எல்லையில்லாத, அளவிடமுடிதா.. அன்பையும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல்வேறு விசயங்களை எனக்கு கற்று கொடுத்தவன் நீ தான். உடலை தாண்டி எனது உயிரை உணர வைத்த எனது மகனே, உனக்கு அன்னை ஆனதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க....Mothers Day Gifts : அன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு என்ன பரிசு தரப்போறீங்க..? பெஸ்ட் ஐடியா இதோ..!

click me!