நண்பனை காப்பாற்ற போராடும் கார்த்திக் – ஹாஸ்பிடலில் துர்கா: கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Oct 16, 2025, 07:40 PM IST
Karthigai Deepam Serial Today Update Oct 16 Episode in Tamil

சுருக்கம்

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் உயிருக்கு போராடும் நண்பனை கார்த்திக் காப்பாற்றினாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் - நவீனை கண்டுபிடிக்க போராடும் கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இதுவரையில் சாமுண்டீஸ்வரியின் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்த்திக் தான் கூடவே இருந்து அவரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து சாமுண்டீஸ்வரி தனது மகள் ரேவதியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கும் கார்த்திக் யார் என்பது ரேவதிக்கு தெரியும். அவரை தவிர குடும்பத்தில் உள்ள சுவாதி, ரோகிணி மற்றும் துர்கா ஆகியோருக்கு இதுவரையில் தெரியவில்லை.

ஆளு தான் ஒல்லி... ஆனா இசையில கில்லி! இசையமைப்பாளர் அனிருத்தின் ஆச்சரியப்படுத்தும் சொத்து மதிப்பு!

இந்த சூழலில் தான் கார்த்திக்கின் நண்பனான நவீனை துர்கா காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தெரியவர இருவரையும் வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அவர்களுக்கு அவரது பாட்டி பரமேஸ்வரி தான் அடைக்கலம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நவீனை கடத்தி அப்படியே உயிருடன் ஒரு பாக்ஸில் போட்டு மண்ணுக்கு அடியில் சந்திரகலாவின் அடியாட்கள் புதைத்துவிட்டனர்.

இந்தப் பலி எப்படியோ சாமுண்டீஸ்வரி மீது விழுந்தது. துர்காவிற்கும், சாமுண்டீஸ்வரிக்கும் இடையில் கலகம் உண்டானது. இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அம்மா மீதான கோபம், நவீன் மீதான காதலால் பஞ்சாயத்தை கூட்டிய துர்கா அம்மா மீது புகார் கொடுத்தார். அதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவரை லாக்கப்பில் அடைக்கச் செய்தார்.

முதல் வாரமே அதளபாதாளத்துக்கு சென்ற பிக் பாஸ் சீசன் 9 டிஆர்பி ரேட்டிங்... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?

இதைத் தொடர்ந்து துர்காவை உசுப்பேத்திவிட வந்த சந்திரகலா உன்னுடைய புருஷன் இறந்துவிட்டான் என்று சொல்ல, துர்காவோ என்ன செய்வதென்று தெரியாமல் இனிமேலும் உயிருடன் இருக்க கூடாது என்று பூச்சி மருந்தை குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த கார்த்திக் எப்படியாவது நவீன் உடன் பேச வைத்துவிட வேண்டும் என்று கருதி அவரது நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், சந்திரகலாவோ முதலில் அந்த எண்ணை பிளாக் செய்ய சொல்லி அந்த ரவுடியிடம் சொல்லிவிட்டார் அல்லவா. அதனால், கார்த்திக் டயல் செய்த அந்த நம்பருக்கான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் கார்த்திக் எவ்வளவோ முயற்சி செய்தாலும் நவீனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் நீண்ட நேரமாக பெட்டிக்குள்ளேயே இருப்பதால் நவீனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. நவீன் சொன்ன மணி சத்தத்தை வைத்து அவரை தேடும் முயற்சியில் நவீன் மற்றும் கார்த்திக் இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில் கார்த்திக் நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா இல்லை நாளையும், நாளை மறுநாளும் இந்த காட்சி தொடர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷுக்கு வில்லியாக மாறிய விஜயா... அம்மாவிற்கு பயந்து முத்து எடுக்கும் அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்