சாமுண்டீஸ்வரிக்கு தெரியவரும் உண்மை: முடிவுக்கு வருகிறதா கார்த்திகை தீபம் 2 சீரியல்?

Published : Aug 31, 2025, 06:38 PM IST
Karthigai Deepam 2

சுருக்கம்

Karthigai Deepam 2 Serial This Week Promo : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கான்ஸ்டபிளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிய வருமா என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியலானது விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் ரேவதி திருமணத்தின் போது வரதட்சணை சீதனத்தை காண்பிக்கவில்லை. இந்த சூழலில் இப்போது துர்கா மற்றும் செல்வம் திருமணத்தின் போது வரதட்சணை பொருட்களை மாப்பிள்ளை வீட்டாரிம் காண்பித்துள்ளார்.

ஏற்கனவே மாப்பிள்ளையின் அம்மா மற்றும் அப்பா இருவரும் திருடர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்த சூழலில் இந்த வாரம் அவர்களைப் பற்றிய உண்மை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று மாப்பிள்ளையும் சீட்டிங் என்பது ரோகிணிக்கு தெரிந்த நிலையில் இந்த வாரம் அவரைப் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி உண்மை தெரிய வரும் சூழலில் நவீன் மற்றும் துர்காவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக பரமேஸ்வரி குடும்பம் தான் தனது அம்மாவை கொன்றார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கான்ஸ்டபிள் மூலமாக சாமுண்டீஸ்வரிக்கு தனது அம்மாவை கொன்றது யார் என்ற உண்மை தெரிந்து இரு வீட்டாரது குடும்பமும் ஒன்று சேருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி ஒன்று சேர்ந்தால் இந்த சீரியல் முடிவுக்கு வருமா என்பது குறித்தும் இந்த வாரம் தெரிய வரும். அதுவரையில் பொறுமையாக இருந்து கார்த்திகை தீபம் 2 சீரியலை பார்த்து ரசிக்கலாம்.

குறிப்பாக கார்த்திக் மற்றும் ரேவதிக்கு குழந்தை பிறக்கும் காட்சிகளும் சீரியலில் ஒரு சில காட்சிகளில் இடம் பெற்ற நிலையில் இப்போதைக்கு இந்த சீரியலானது முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷுக்கு வில்லியாக மாறிய விஜயா... அம்மாவிற்கு பயந்து முத்து எடுக்கும் அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்