உங்களை ரகசியமாக உளவு பார்க்கிறதா வாட்ஸ்அப்? எலான் மஸ்க் கேள்விக்கு கூகுளின் பதில் என்ன?

Published : May 17, 2023, 03:24 PM ISTUpdated : May 17, 2023, 03:27 PM IST
உங்களை ரகசியமாக உளவு பார்க்கிறதா வாட்ஸ்அப்? எலான் மஸ்க் கேள்விக்கு கூகுளின் பதில் என்ன?

சுருக்கம்

உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை வாட்ஸ்அப் கேட்கிறதா, உங்களை ரகசியமாக உளவு பார்க்கிறதா? என்பதை இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ்அப் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. பயனர்களின் தரவுகளை மெட்டாவுடன் பகிர்வதாக குற்றம் சாட்டப்பட்டது. வாட்ஸ்அப், பல ஆண்டுகளாக, பயனர்களின் தரவைப் பார்க்கவோ அல்லது அவர்களின் செய்திகளைப் படிக்கவோ அல்லது அவர்களின் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது என்று பல்வேறு விளக்கங்களை வெளியிட்டுள்ளது. 

வாட்ஸ்அப் தனது செய்திகளில் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதாகவும் கூறுகிறது. இருப்பினும், ட்விட்டர் இன்ஜினியர் ஒருவர் இரவு நேரத்தில் தனது தொலைபேசியின் மைக்ரோஃபோனை உறங்கிக் கொண்டிருந்தபோது பயன்படுத்தியதாகக் கூறியதால், இப்போது WhatsApp மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

குறிப்பாக "WhatsApp ஐ நம்ப முடியாது" என்று எலான் மஸ்க் கூறிய பிறகு இது வைரலாகியது. வாட்ஸ்அப் மைக்ரோஃபோன்கள் மூலம் 'உளவு பார்க்கிறது' என்ற உரையாடலைத் தூண்டியுள்ளது. . எனவே, உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை வாட்ஸ்அப் கேட்கிறதா? என்பதை பார்ப்போம்.

Foad Dabiri என்ற ட்விட்டர் பொறியாளர், ஆண்ட்ராய்டு டேஷ்போர்டின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டு, "நான் தூங்கிக்கொண்டிருந்தபோதும், காலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து வாட்ஸ்அப் பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. என்ன நடக்கிறது?" என்று பதிவிட்டார். இந்த "வாட்ஸ்அப்பை நம்ப முடியாது" என்று அந்த ட்வீட்டிற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்,

ஒரு ட்வீட்டில், வாட்ஸ்அப் பிரச்சினையை தெளிவுபடுத்தியது. இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழை காரணமாக நடக்கிறது என்று கூறியது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த கூகுளிடம் வாட்ஸ்அப் கேட்டுக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப், மற்றொரு ட்வீட்டில், தங்கள் பயனர்கள் தங்கள் மைக்ரோஃபோன்களில் "முழுக் கட்டுப்பாட்டில்" இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வாட்ஸ்அப் பயனர்களின் மைக்ரோஃபோனை ரகசியமாகப் பயன்படுத்துகிறது என்ற கூற்றை இந்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.  WhatsApp பயனர்களுக்கு பாதுகாப்பையும் அவர்களின் தனியுரிமையையும் வழங்கும் தனியுரிமைக் கொள்கையைக் கொண்டுள்ளது, அதை 'முன்னுரிமை' என்று பட்டியலிடுகிறது. அதன் தனியுரிமைக் கொள்கை அறிக்கையில், நிறுவனம் கூறுகிறது. 

உங்கள் ஃபோனின் மைக்கை ஃபோன் கால் செய்வதற்கு அல்லது குரல் செய்தியைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்துவதற்கு முன் அதை அனுமதிக்கும்படி வாட்ஸ்அப் பயனரிடம் கேட்கிறது. வைரலான ட்வீட்டைப் பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழையால் நடந்ததாக வாட்ஸ்அப் கூறுகிறது. ஐபோன் பயனர்கள் இதுவரை இந்தத் தகவலைப் பார்த்ததாகத் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க..8 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. இன்னும் 2 நாள் கவனம்! தமிழக மக்களை எச்சரித்த வானிலை மையம்

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!