இனிமேல் போன்கள் தொலைந்தால் கவலைப்பட தேவையில்லை.. இந்திய அரசின் அட்டகாச திட்டம் தெரியுமா?

Published : May 15, 2023, 06:48 PM IST
இனிமேல் போன்கள் தொலைந்தால் கவலைப்பட தேவையில்லை.. இந்திய அரசின் அட்டகாச திட்டம் தெரியுமா?

சுருக்கம்

தொலைந்த போன்களைக் கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் பான் - இந்தியா அமைப்பை அரசாங்கம் விரைவில் வெளியிட உள்ளது.

டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட சில தொலைத் தொடர்பு வட்டங்களில் CEIR அமைப்பின் பைலட்டை இயக்கி வருகிறது. மேலும் இந்த அமைப்பு இப்போது இந்தியா முழுவதும் பயன்படுத்த தயாராக உள்ளது.

இதுகுறித்து பல்வேறு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, “CEIR அமைப்பு மே 17 அன்று இந்தியா முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. CDoT இன் தலைமை செயல் அதிகாரியும், திட்டக் குழுவின் தலைவருமான ராஜ்குமார் உபாத்யாயை இந்த தேதியை உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் பயன்படுத்த தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த அமைப்பு தயாராக உள்ளது, இப்போது இது இந்த காலாண்டில் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும். மக்கள் தங்கள் தொலைந்த மொபைல் போன்களைத் தடுக்கவும் கண்காணிக்கவும் உதவும் என்று உபாத்யாய் கூறினார். இந்தியாவில் மொபைல் சாதனங்கள் விற்பனைக்கு முன், 15 இலக்க தனித்துவ எண் அடையாளங்காட்டியான IMEI-ஐ வெளியிடுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட IMEI எண்களின் பட்டியலை மொபைல் நெட்வொர்க்குகள் அணுகும். பொதுவான நடைமுறைகளில் ஒன்று, திருடப்பட்ட மொபைல் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்ணை தவறானவர்கள் மாற்றுவது, இது போன்ற கைபேசிகளை கண்காணிப்பதையும் தடுப்பதையும் தடுக்கிறது. இது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினை. நெட்வொர்க்கில் உள்ள குளோன் செய்யப்பட்ட மொபைல் போன்களை CEIR மூலம் தடுக்க முடியும்.

CEIR இன் அடிப்படை நோக்கம் திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்களின் பயன்பாட்டைத் தடுப்பதாகும். இதன் மூலம் செல்போன்கள் திருடப்படுவதைத் தடுக்கலாம். திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்களை காவல்துறையினரிடம் கண்டறியலாம்.

குளோன் செய்யப்பட்ட அல்லது போலியான மொபைல்களைக் கண்டறிவது, குளோன் செய்யப்பட்ட மொபைல்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும். போலி மற்றும் குளோன் செய்யப்பட்ட மொபைல் போன்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை தடுக்கலாம்.

சமீபத்தில், கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது. ஆப்பிள் ஐடியின் உதவியுடன் தொலைந்த மொபைல் போன்களைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பை ஆப்பிள் ஏற்கனவே கொண்டுள்ளது, ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களைச் சுற்றி பெரிய சிக்கல்கள் உள்ளன.

இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு