
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண அரட்டைகளுக்கு மட்டுமின்றி, அலுவல் சம்பந்தமான விஷயங்களிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் உயர்மட்ட அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு மூலமாகவும் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் குறியிட்டு பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வேலைசெய்யவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
திடீரென ஏற்பட்ட இந்த முடக்கத்திற்கு, வாட்ஸ்அப் தரப்பில் உடனடி விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் முடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விரைவில் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றும், திடீர் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சரிசெய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.