
இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், உபர் நிறுவனத்துடன் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி வாட்ஸ் அப் மூலமாகவே உபர் கேப்களை புக் செய்து பயணிக்கலாம். உபர் செயலி இல்லாதவர்கள் கூட வாட்ஸ் அப் மூலம் உபர் கேப்களை புக் செய்து பயணிக்கலாம்.
இது வழக்கமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதை போன்று ஈஸியான நடைமுறை என கூறப்படுகிறது. வாட்ஸ் அப் சாட் மூலமாகவே தங்களுடைய பிக் அப் லொகேஷன், டிராப் லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பினால் போதுமாம், அதுவே கேப் இருப்பை பொருத்து அதன் விவரங்களை அனுப்பிவிடுமாம். வழக்கமாக உபர் ஆப்பில் செய்யும் இந்த நடைமுறைகளை இனி வாட்ஸ் அப் மூலமே செய்து விடலாம்.
உலகிலேயே இந்தியாவில் தான் இந்த வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளார்கள். முதற்கட்டமாக லக்னோவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரைவில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் மற்ற மொழிகளும் சேர்க்கப்பட உள்ளதாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.