
இந்தியாவில் பல கோடி மக்கள், தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். அந்நிறுவனம் இந்தியாவில் தனது பேமெண்ட்ஸ் சேவையை 2 கோடி பேருக்கு வழங்கி வந்த நிலையில், அதனை தற்போது 4 கோடி பேருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
UPI சார்ந்து இயங்கும் பேமெண்ட் சேவைக்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. இதன்மூலம் என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப்பும் இடம்பெற்றுள்ளது.
என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின்படி வாட்ஸ்அப் நிறுவனம் ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமெண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப் செயலி, கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.
வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் UPI உருவாக்கி கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஷேர் செய்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் வாட்ஸப் உள்பட மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.