
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உலகம் முழுக்க ட்விட்டர் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், ஊழியர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் என அவர் தெரிவித்தார்.
ட்விட்டர் போன்றே கூகுள் நிறுவனமும் ஏப்ரல் மாத துவக்கத்தில் சிலிகான் வேலி அலலுவலகங்களை திறக்க தயாராகி வருகிறது. மேலும் ஊழியர்களையும் அலுவலகம் வர ஆயத்தமாக கூறி வருகிறது. மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற போதும், வாரத்தில் சில நாட்கள் மட்டும் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கூகுள் நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று கோரத்தாண்டவம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு, ஊழிடர்களில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்ற துவங்கினர். தற்போது வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில் பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலகங்களை திறந்து வருகின்றன.
"வியாபார ரீதியிலான பயணங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க ட்விட்டர் அலுவலகங்கள் மார்ச் 15 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. எங்கிருந்து சிறப்பாக பணியாற்ற விரும்புகிறீர்களோ அங்கிருந்தே பணியாற்றலாம். இது வீட்டில் இருந்து பணியாற்றுவதையும் குறிக்கும்," என பராக் அகர்வால் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.