
ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடிய சுந்தர் பிச்சை!
இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான இணையதள தொழில்நுட்பம் குறித்து கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மேற்குவங்கத்தில் அவர் படித்த காரக்பூர் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறுவணிகர்கள் உற்பத்திப்பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சித்திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்தியாவில் சிறுவர்த்தகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சுதந்திரமாக அனுமதிக்கப்படும்போது அதன் வளர்ச்சி அளப்பெரியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கூகுள் இணையதளம் வாயிலாக சிறு வணிகர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தும் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துச் செல்ல, காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சுமார் 300 பேரை சந்திக்க வந்துள்ளதாகவும் திரு. சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.