சமையல் போட்டியில் ஜெயித்தால் பணம் கொட்டும்.. புதிய பேஸ்புக் மோசடியில் சிக்கிடாதீங்க..!

By Raghupati RFirst Published Mar 1, 2024, 5:22 PM IST
Highlights

தற்போது அதிகரித்து வரும் புதிய பேஸ்புக் மோசடி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தப்படும் சோசியல் மீடியாவாக பேஸ்புக் இருக்கிறது. கடந்த தசாப்தத்தில், தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மோசடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். மேலும் அவர்கள் அதை ஒரு அளவிற்குச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், மோசடி செய்பவர்கள் இன்னும் எப்படியாவது எளிமையான நுட்பங்கள் மூலம் பயனர்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.

இதுபோன்ற ஒரு சம்பவம் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. ஃபேஸ்புக் பயனர் அகன்ஷா பாண்டே பகிர்ந்துள்ள பதிவில், “மோசடி செய்பவர்கள் இப்போது தெரிந்த நண்பரின் ஹேக் செய்யப்பட்ட சுயவிவரத்தின் மூலம் மோசடி செய்கிறார்கள். புதிய பேஸ்புக் மோசடி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மோசடி செய்பவர்கள் முதலில் ஒரு நண்பரின் ஹேக் செய்யப்பட்ட சுயவிவரத்திலிருந்து பொதுவான செய்தியை அனுப்புகிறார்கள். மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் சமையல் போட்டியில் வெற்றிபெற உதவும் என்று அவர்கள் கூறும் குறியீட்டைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட குறியீடு உண்மையில் பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கான OTP ஆகும். குறியீடு மூலம், மோசடி செய்பவர்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகவும்.

மேலும் நண்பர்கள் பட்டியலில் உள்ள பிற பயனர்களை ஏமாற்றவும் பேஸ்புக் கணக்கில் நுழைகிறார்கள். தெரியாதவர்களுக்கு, உங்கள் கல்வி, முகவரி, தொடர்புகள், தனிப்பட்ட படங்கள், அரட்டைகள் மற்றும் பிறவற்றைப் பற்றிய தகவல்களை உங்கள் Facebook கணக்கில் வைத்திருக்க முடியும். மோசடி நடவடிக்கைகள், பிளாக்மெயில் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு தகவல் பயன்படுத்தப்படலாம்.

இதுபோன்ற பேஸ்புக் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிரும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் OTP பெறும் செய்தியின் அனுப்புநர் மற்றும் பிற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!