
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ (JIO), அண்மையில் தனது அனைத்து பேக்குகளின் கட்டணங்களையும் உயர்த்தியது. இந்த விலை உயர்வு டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
கட்டணங்களை உயர்த்திய போதும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அண்மையில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத ஒரு சலுகையை ஜியோ வழங்கி இருந்தது. அதன்படி 1 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக மேலும் ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் வழங்கி உள்ளது. அதன்படி ரூ. 2545 பிரீபெயிடு பேக்கின் வேலிடிட்டி மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக ஜியோவின் ரூ. 2545 பேக்கின் வேலிடிட்டி 336 நாட்களாக இருந்து வந்தது. தற்போது இந்த பேக்கின் வேலிடிட்டி மேலும் 29 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரூ. 2545 பேக்கின் சலுகை தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோரும், புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகையின் மூலம் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.