
எங்கும் பேடிஎம்..எதிலும் பேடிஎம்....! அடுத்த கட்டநகர்வு “பேடிஎம் வங்கி “- அனுமதி வழங்கியது ரிசர்வ் வங்கி....!!!
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அவர்கள், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் .
அதனை தொடர்ந்து தற்போது, ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் தற்போது அனைத்து வகையான கட்டணங்களையும் பேடிஎம் மூலம் செலுத்த மக்கள் தொடங்கியுள்ளனர்.
பேடிஎம் வங்கி ?
அதாவது, விவரம் தெரிந்தவர்கள் பேடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடுத்தர மக்கள் இது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.இருந்த போதிலும், டிஜிட்டல் இந்தியா கனவோடு பயணிக்கும் நம் மக்கள், முழுக்க முழுக்க , ரொக்க மில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதற்காக , மத்திய அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் , பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி . அவ்வாறு பேமண்ட் வங்கி தொடங்கினால், எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்ற தகவல் சரியாக குறிப்பிடபடவில்லை. இருந்தபோதிலும், தொடக்கத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் , பேமென்ட் வங்கி தொடங்கப்போவதாக, பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பு : பேமென்ட் வங்கி தொடங்க தற்போது 4௦௦ கோடி அளவிற்கு , முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் 51 சதவீத முதலீடு பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மாவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.