1400 இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்யும் ஓலா எலெக்ட்ரிக் - என்ன ஆச்சு தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 24, 2022, 03:30 PM IST
1400 இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்யும் ஓலா எலெக்ட்ரிக் - என்ன ஆச்சு தெரியுமா?

சுருக்கம்

ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்த AIS 156 தரச் சான்றை பெற்றுள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1441 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ரி-கால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த நடவடிக்கையை அதரடியாக எடுத்து உள்ளது. 
மார்ச் 26 ஆம் தேதி பூனேவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த ஸ்கூட்டர் தனித்து விடப்பட்டு இருந்தது என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது. 

"முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களின் மீது முழுமையான ஆய்வு மற்றும் அதன் பாகங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை சரிபார்க்க முடிவு செய்து இருக்கிறோம். இதன் காரணமாக 1441 வாகனங்களை ரி-கால் செய்கிறோம்," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

தரமுள்ள பேட்டரி:

"இந்த ஸ்கூட்டர்கள் எங்களின் சர்வீஸ் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து பேட்டரி சிஸ்டம்கள், தெர்மல் சிஸ்டம்கள் மற்றும்  பாதுகாப்பு சிஸ்டம்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவர்." என்றும்  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்த AIS 156 தரச் சான்றை பெற்றுள்ளன. மேலும் இவை ஐரோப்பிய தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ECE 136 சான்றையும் பெற்றுள்ளன.

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், தங்களின் இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து வருகின்றன. இதேபோன்று ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் 3 ஆயிரம் இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 

அரசு கண்டனம்:

முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்கும் என வலியுறுத்தி இருந்தது. "கடந்த இரு மாதங்களாக பல்வேறு எலெக்ட்ரிக் வாகன விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டினால் கடுமையான அபராதம் விதிப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படு. பிரச்சினை ஏற்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக ரீ-கால் செய்ய உத்தரவிடப்படும்," என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
ரெட்மி நோட் 14 ப்ரோ+ வாங்கினால்.. ரூ.5,000 மதிப்புள்ள ரெட்மி பட்ஸ் இலவசம்.. சூப்பர் டீல்!