
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ (JIO), அண்மையில் தனது அனைத்து பேக்குகளின் கட்டணங்களையும் உயர்த்தியது. இந்த விலை உயர்வு டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோ நிறுவனம், புதிதாக 1 ரூபாய் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த 1 ரூபாய் பேக் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 100 எம்.பி அதிவேக டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த 100 எம்.பி முடிவடையும் பட்சத்தில், இணைய சேவையின் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மை ஜியோ செயலியில் உள்ள ரீசார்ஜ் (Recharge) ஆப்ஷன் சென்று ‘வேல்யூ‘ (Value) என்கிற செக்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள அதர் பிளான்ஸ் (Other Plans) என்கிற பகுதியில் ரூ. 1 சலுகையை பெறலாம்.
இந்த சலுகை ஒரு நம்பருக்கு 10 முறை வழங்கப்படுமாம். இதன்மூலம் ஒருவர் 10 ரூபாய் செலவழித்து 1 ஜி.பி டேட்டாவை பெற முடியும். இதுவரை எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இப்படி ஒரு சலுகையை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.