ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.. விவரம் உள்ளே..

Published : Mar 14, 2024, 12:34 PM ISTUpdated : Mar 14, 2024, 12:40 PM IST
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.. விவரம் உள்ளே..

சுருக்கம்

லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான வேலைகளை பொதுமக்கள் செல்போன் மூலம் செய்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் பேமேண்ட், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் ஆன்லைனில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர். ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி போலி செயலிகள் மோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடி பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர். எனவே இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர்  காவல்துறையும் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகள் ஆண்ட்ராய்டு பயனர்களின் முக்கியமான தகவல்களை பெறலாம் என்பதால் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கம்பெனியைக் காப்பாற்ற 5G சேவையில் தீவிரம் காட்டும் வோடபோன் ஐடியா! தாக்குப்பிடிக்க முடியுமா?

CERT-In Android பாதுகாப்பு எச்சரிக்கை என்ன சொல்கிறது?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் பல பாதிப்புகள் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. Android பதிப்புகள் 12, 12L, 13 மற்றும் சமீபத்திய 14ஐயும் பாதிக்கின்றன. இந்தியாவில் இந்த பதிப்புகளை இயக்கும் ஃபோன்களின் எண்ணிக்கை எளிதாக 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக ARM கூறுகள் மற்றும் MediaTek கூறுகள், Qualcomm கூறுகள் மற்றும் Qualcomm க்ளோஸ்-சோர்ஸ் கூறுகளுக்குள் பல பாதிப்புகள் இருப்பதை CERT-In சுட்டிக்காட்டி உள்ளது.

உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் தானா.. ரூ.10000க்குள் இருக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்..

பல சிப் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட பட்டியலில் இருப்பதால், Samsung, Realme, OnePlus, Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டை சேர்ந்த ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவர்கள் இந்தச் சிக்கலைப் பற்றி கவலைப்பட வேண்டும், மேலும் இந்த பாதிப்புகளுக்கான பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக வெளியிடுவதை உறுதிசெய்ய வேண்டும். எனினும் பெரும்பாலான ஃபோன் பிராண்டுகள் இந்தச் சிக்கல்களைப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, அவை அனைத்தும் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், CERT, தெரியாத தளங்களில் இருந்து செயலிகளை நிறுவுவதை பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,  தெரியாத அனுப்புநர்கள் அல்லது மின்னஞ்சலின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது..

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு