
எதிர்காலத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்களே பெரும்பாலான வேலைகளைச் செய்துவிடும் என்பதால், மனிதர்கள் விரும்பினால் வேலைக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
விவா டெக்னாலஜி 2024 நிகழ்ச்சியில் பேசிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தான் இயங்கும் என்பதற்கு மிகவும் சாத்தியமான சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
"அநேகமாக நம்மில் யாருக்கும் வேலை இருக்காது" என்று கூறிய எலான் மஸ்க், "யாராவது எந்த வேலையையாவது செய்தால் அது அவர்கள் விருப்பமாகவே இருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.
ரொம்ப ஆபத்தான கேஜெட்ஸ்... இதெல்லாம் அமேசான்ல சர்வசாதரணமா கிடைக்குது!
அந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் அனைவருக்கும் உயர் வருமானம் இருக்கும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய எந்த சேவையையும் AI ரோபோக்கள் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நீங்கள் பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் AI ரோபோக்களே நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கிவிடும்" என்றும் எலான் மஸ்க் பேசினார்.
பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பணியை விரைவில் AI செய்யத் தொடங்கிவிடும் என்றும் எலான் மஸ்க் சொல்லியிருக்கிறார். AI தொழில்நுட்பம் 30 கோடி வேலைகளைக் குறைக்கக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் பொருளாதாரத்தைப் பொறுத்து அதன் தாக்கம் வேறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது.
சிறந்த வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.