
ஜியோவிற்கு எதிராக பிஎஸ்என்எல் அதிரடி...
ஜியோவிற்கு போட்டியாக தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திட்டம் போட்டு சிலபல அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது .
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகையை வாரி வழங்குவதில் மும்முரம் காட்டி வருகிறது . அதன் படி,ரூ.399 செலுத்தினால், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளை தங்கு தடையின்றி பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது
ரூ99 திட்டம்
அன்லிமிட்டெட் ஆன்-நெட் கால்ஸ். அதாவது ஒரே நெட்வொர்க்களுடன் அழைப்பது கொள்ள முடியும் மற்றும் 500 எம்பி டேட்டாவை 28 நாள் கால அவகாசத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்
ரூ.339 திட்டம்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு மட்டுமே அன்லிமிடட் கால்ஸ் மேற்கொள்ள முடியும்.இதர நெட்வொர்க் மொபைலுக்கு கால் செய்வதற்கு ஒரு நாளைக்கு 25 நிமிடங்கள் வரை பேச முடியும்.
இந்நிலையில் மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஜியோவிற்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.