BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!

Published : Oct 27, 2022, 08:54 PM IST
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!

சுருக்கம்

மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ஃபைபர் பிராட்பேண்டிலுள்ள இரண்டு அற்புதமான திட்டங்களை விரைவில்  நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 75 வது சுதந்திர தினத்தன்று புதிதாக இரண்டு திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது. தற்போது இதனை நிறுத்த உள்ளதாக பிஎஸ்என்எல் கூறியுள்ளது.  எனவே, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் மூலம் வழங்கப்படும் சேவையை நீங்கள் பெற விரும்பினால் இது தான் அதற்கு சரியான நேரம்.

பிஎஸ்என்எல் விரைவில் நிறுத்த உள்ள பிராட்பேண்ட் திட்டங்களின் விவரம்:

இந்த இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களில் ஒவ்வொன்றின் விலையும் ரூ.275 ஆகும். இரண்டுமே ஒரே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.  ஆனால் இதன் சலுகைகளில் சில மாறுபாடுகள் உள்ளன. 

Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

ஒரு திட்டம் 30 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்கும். மற்றொன்று 60 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடட் வாய்ஸ் கால் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.  மேலும் இந்த இரண்டு திட்டங்களும் 75 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

மேலே குறிப்பிட்டது போல இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நவம்பர் 15ம் தேதி முதல் இந்த திட்டங்களை நிறுத்த உள்ளதாக பிஎஸ்என்எல் கூறி உள்ளது.

நீங்கள் இந்த திட்டங்களை உபயோகிக்க விரும்பினால் நவம்பர் 15 ம் தேதிக்குள் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்றுமே உங்களால் இதை பயன்படுத்த முடியாது. பிஎஸ்என்எல் இந்த திட்டங்களில் எந்த விதமான  OTT தளங்களுக்கும் சலுகை கொடுக்கவில்லை. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையான ஜிஎஸ்டி வரி இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னது வியர்வையை வைத்து சார்ஜ் பண்ணலாமா ? அட்வான்ஸ் சார்ஜிங் டெக்னிக்

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!