டைப் ‘சி’ சார்ஜ் முறைக்கு மாறும் Apple நிறுவனம்!

Published : Oct 27, 2022, 09:13 PM IST
டைப் ‘சி’ சார்ஜ் முறைக்கு மாறும் Apple நிறுவனம்!

சுருக்கம்

பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் அடுத்த ஆண்டு முதல் ஐபோனிற்கு USB-C வகை சார்ஜர்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது 2024 இல் அமலுக்கு வருகிறது.

ஐரோப்பியா நாட்டில் வெளியாகும் அனைத்து கேட்ஜட்டுகளும் டைப் சி போர்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும் என ஒரு சட்டத்தை ஐரோப்பியா அறிவித்திருந்தது. இந்த நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜேனல் ( The Wall Street Journal ) செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணல் ஒன்றில் ஆப்பிள்  நிர்வாகி கிரெக் ஜோஸ்வியாக் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘இனி வரும் காலங்களில் வெளியாக உள்ள அனைத்து ஐபோன்களும் USB-C போர்ட் சார்ஜருடன் லான்ச் செய்யப்படும்’ என்றார். 

ஐரோப்பியாவின் சட்டத்திற்கு இணங்க இவ்வாறு டைப் சி சார்ஜ் முறைக்கு ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளதாக தெரிகிறது.  இதனால் இனி அனைத்து ஐபோன்களுக்கும் USB-C போர்ட் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், ஐபோன் 15 ஆனது USB-C போர்டுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட்போனில் புதிதாக Maintenance Mode அறிமுகம்! இனி பயமின்றி இருக்கலாம்!!

இருப்பினும், இந்த USB-C சார்ஜ் முறையானது ஐரோப்பியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா அல்லது இந்தியாவிற்கும் பொருந்துமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே Macs, iPadகள் மற்றும் பிற சாதனங்களை USB-C சார்ஜ் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! இந்த பிளான் விரைவில் முடிகிறது!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?