மீண்டும் மெரினாவில் பதற்றம்..! ஒன்று கூட திட்டம்....அவசர அவசரமாக போலீசார் குவிப்பு...!

 
Published : Mar 31, 2018, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
மீண்டும் மெரினாவில் பதற்றம்..! ஒன்று கூட திட்டம்....அவசர அவசரமாக போலீசார் குவிப்பு...!

சுருக்கம்

younsters planned to do protest against merina

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டம்  நடத்த  மெரினாவில் இளைஞர்கள் கூட இருப்பதாக தகவல் வெளியானது

மெரீனா புரட்சி வெடிக்கட்டும்...மீண்டும் ஒன்று கூடுவோம் என்பது போல,வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர அவசரமாக 250 கும் மேற்பட்ட,போலீசார் மெரீனா கடற்கரையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இந்நிலையில், மீண்டும் இன்று காலை,சில மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சில மணி துளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போராட்டாம் குறித்து விசாரிக்கும் போது,சிபிஎஸ்சி வினாத்தாள் வெளியனா விவகாரம் தொடர்பாக அதற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், மறு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஜல்லிகட்டுகாக நடந்த மெரீனா புரட்சி உலக அளவில் பெரும் புகழ்  பெற்றது.வெற்றியும் கண்டது எனவே,எந்த ஒரு நல்ல திட்டத்திற்கும் இளைஞர்கள் மெரினாவில் கூடினால் தான் அது வெற்றி அடையும் என்ற மனபான்மை இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!