“உருவம் மட்டுமல்ல செயல்களிலும் எங்களுக்கு வெற்றியே...” - ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

 
Published : May 13, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
“உருவம் மட்டுமல்ல செயல்களிலும் எங்களுக்கு வெற்றியே...” - ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

சுருக்கம்

We have won not only the image but also the deeds

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த குண்டிருசன்பாளையம் கிராமத்தை சோந்தவர் மாணிக்கம். டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள்.

கார்த்திகா, கீர்த்திகா ஆகியோர் கொங்கணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து, பொது தேர்வு எழுதினர். இதன் முடிவு நேற்று வெளியாகி, இருவரும் தேர்ச்சி பெற்றனர்.

ஒரே உருவ அமைப்பில்  இருந்து ஆச்சரியம் அடைய செய்து வரும் அவர்கள், பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்ணை (1117) பெற்று ஆச்சரியம் அடைய செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ஒரே உருவ அமைப்பில் மட்டுமின்றி, எங்களது எண்ணமும், செயலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதை போலவே எங்களது பிளஸ் 2 மதிப்பெண்ணும் கிடைத்துள்ளது.

மேலும், எதிர் வரும் காலங்களில் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே துறையில் படித்துஅதிலும் சாதனை செய்வோம் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!