
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர் மற்றும் 19 மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறை கட்டமைப்பை மேம்படுத்த 1136 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஏழு முறை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆளுநர் கேட்ட விளக்கத்தையும் அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களின் விருப்பமான சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தருவார் என கருதுகிறோம்.
கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்
பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தான் இருக்க வேண்டும் என்று யூ.ஜி.சி விதிமுறையில் எந்த குறிப்பும் இல்லை. இதுவரை சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை மறுத்தோ அல்லது வேண்டாம் என்றோ ஆளுநரிடம் இருந்து பதில் வரவில்லை. சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம்.
குஜராத்தில் 2012ம் ஆண்டு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது மாநில முதல்வர்கள் பல்கலைக்கழக வேந்தர் ஆகலாம் என ஆளுநருக்கு மசோதா நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளை மீறியதாக இல்லை. அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. பூஞ்ச் கமிஷன் சார்பில் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ஆளுநருக்கு உள்ள வேலை பளுவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது முறையாக இருக்காது. மேலும் பணி சுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
திருச்சி விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கொலை விவகாரம்; சிறுவன் உள்பட 6 பேர் கைது
மீண்டும் ஆளுநருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களோடு சட்டத்துறையின் மூலம் கடிதம் அனுப்பப்படும். தமிழ்நாட்டில் உள்ள இசை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தான் வேந்தராக இருககிறார். அந்த மசோதாவிற்கு அப்போது இருந்த ஆளுநர் ரோசையா ஒப்புதல் அளித்திருந்தார். ஆளுநருக்கு உள்ள வேலைப் பளுவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது பொருத்தமானதாக இருக்காது. வேலைப்பளுவாக இருக்கும் என மத்திய, மாநில உறவுகளை ஆராயும் அமைப்பே கூறியுள்ளது என்றார்.