சென்னை அருகே பயங்கரம்.. அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் பலி..

Published : May 04, 2023, 04:04 PM ISTUpdated : May 04, 2023, 05:14 PM IST
சென்னை அருகே பயங்கரம்.. அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 6 பேர் பலி..

சுருக்கம்

மாமல்லபுரம் அருகே அரசு அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ, பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!