இஃப்தார் நோன்பை கொண்டாடிய தேமுதிக – விஜயகாந்த் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பு

 
Published : Jun 20, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
இஃப்தார் நோன்பை கொண்டாடிய தேமுதிக – விஜயகாந்த் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பு

சுருக்கம்

Vijayakanth and the volunteers participated in the celebration of the ifthar

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு இன்று நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு அந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் அரசியல் தலைவர்களும் தங்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நாளை அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!