
விஜய்யின் அரசியல் நகர்வுகள், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. ரகசிய் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ள விஜய் ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
ஆளும் கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்லாமல், தேசிய கட்சியான பாஜக-வும் விஜய்யின் அரசியல் வருகையைக் கண்டு கலக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜாதிச் சங்கங்கள் மற்றும் பல கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், கடந்த காலங்களில் திமுக தோல்வியைத் தழுவிய வரலாற்றைத் தனது தொண்டர்களிடம் விஜய் சுட்டிக்காட்டி வருகிறார். "கூட்டணி பலத்தை விடக் கொள்கை பலமே முக்கியம்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.