
தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியுடன் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம். மறு தேர்தல் நடத்தப்பட்டால் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.