12-ம் தேதி கரையை கடக்கிறது 'வர்தா' புயல் : கனமழை எச்சரிக்கை..!!!

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 10:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
12-ம் தேதி கரையை கடக்கிறது 'வர்தா' புயல் : கனமழை எச்சரிக்கை..!!!

சுருக்கம்

வங்கக்‍ கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் 'வார்து' புயல், கரையை கடக்கும் முன், வலுவிழக்கும் என தெரிவித்தார். விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்றோ அல்லது நாளையோ வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுதினம் நெல்லூர் மற்றும் காக்கிநாடாவுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புதாகவும் திரு. பாலச்சந்திரன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பு.. கொடூர சம்பவத்துக்கு திமுக அரசே காரணம்.. பா.ரஞ்சித் ஆவேசம்!