
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும் சமுதாயப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து பேசினார். இந்நிகழ்வின் போது அமமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.