
திருச்சி மாவட்டத்தில் நேந்திரன் வாழைத்தார்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையான நேந்திரன், தற்போது மொத்த விற்பனைச் சந்தையில் வெறும் ரூ.5 முதல் ரூ.10 வரை சரிந்துள்ளது. இதனால் ஒரு வாழைத்தாருக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சந்தை வரத்து அதிகமானதே இந்த விலை சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.