
இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய கடலோர பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஜனவரி 11ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.