டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By Thanalakshmi VFirst Published Sep 15, 2022, 3:31 PM IST
Highlights

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
 

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். .

மேலும்அக்டோபர் 19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க:TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?
 

click me!