IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..

By Thanalakshmi VFirst Published Sep 15, 2022, 2:25 PM IST
Highlights

IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 11, 12,13,14,15 மற்றும் 20 ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி நவ., 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. இதுக்குறித்த விரிவான அட்டவணை tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

click me!