டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

By Thanalakshmi VFirst Published Oct 27, 2022, 5:05 PM IST
Highlights

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தெரிவித்துள்ளது. 
 

நிறுவனம்: மீன்வளத்துறை

காலி பணியிடங்கள்: 88

பணியின் பெயர்: ஆய்வாளர், துணை ஆய்வாளர்

பணியின் விவரம்

ஆய்வாளர் - 64

துணை ஆய்வாளர் - 24

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150 ஆக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.100 ஆக செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: 

ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

துணை ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல், விலங்கியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் படிக்க:தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..

click me!