அமைச்சரிடம் கெட்ட வார்த்தையில் திட்டும் வாங்கும் காவல்துறை; திருச்சி பாஜக சாடல்!!

Published : Oct 27, 2022, 04:00 PM ISTUpdated : Oct 27, 2022, 04:18 PM IST
அமைச்சரிடம் கெட்ட வார்த்தையில் திட்டும் வாங்கும் காவல்துறை; திருச்சி பாஜக சாடல்!!

சுருக்கம்

திருச்சி காவல் துறை அதிகாரிகள் தினமும் காலையில் அமைச்சரிடம் (கே.என்.நேரு) கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குகின்றனர் என்று திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில், ''தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக'' என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, '' ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ''ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு'' என்று பாடல் பாடப்பட்டு வந்தது. ஆனால் யாருக்கு விடியல் தந்தாரு என்று இன்று வரை தெரியவில்லை.

திருச்சி அமைச்சர் நடத்தும் கேர் பள்ளி, கல்லூரிகளில் தமிழை எங்கு வளர்த்தனர். மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்தி திணிப்பு என்று திமுக கூறி வருகிறது. திருச்சி கொலை நகரமாக மாறிவிட்டது. காவல் துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளன. தினமும் காலையில் காவல் துறை அதிகாரிகள் அமைச்சர் (கே.என்.நேரு) வீட்டிக்கு சென்று சுப்ரபாதம் பாடுவது போல் "கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிவிட்டு வர வேண்டியது, அசிங்கமாக இல்லை.‌.." காலையில் சென்று அமைச்சரிடம் திட்டு வாங்குவது தான் உங்கள் வேலையா...? காவல் துறையினர் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு