
தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியிலிருந்து பழங்குடியின மற்றும் பாரம்பரிய மலைவாழ் குடும்பங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்கக் கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.