வறண்ட கிணற்றில் முகம் சிதைந்த நிலையில் இளைஞர் பிணம்; கொலையா? போலீஸ் விசாரணை...

First Published Aug 6, 2018, 12:35 PM IST
Highlights

விழுப்புரத்தில் உள்ள வறண்ட கிணற்றில் முகம் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அப்பம்பட்டு கிராமத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான வறண்ட கிணற்றில் நேற்று மர்மமான முறையில் ஒருவர் இறந்துக் கிடந்தார். இதனைக் கண்ட விவசாயி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அனந்தபுரம் காவலாளர்கள், பொதுமக்கள் உதவியோடு உடலை மீட்டனர். 

பின்னர், சுமார் 35 வயதுமிக்க அந்த இளைஞரை பற்றி காவலாளர்கள் அந்த ஊர்காரர்களிடம் விசாரித்தனர். இறந்தவரின் முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் அவரை சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அவர் அணிந்திருந்த சிகப்பு நிற டி-ஷ்ர்ட் மட்டுமே ஒரே அடையாளம். 

இதனையடுத்து காவலாளர்கள் உடலை உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனைக்கு பிறகே மீதியுள்ள தகவல்கள் தெரியவரும் என்பதால் காவலாளர்கள் வழக்குப்பதிந்துவிட்டு காத்திருக்கின்றனர். 

வறண்ட கிணற்றில் முகம் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இறந்துகிடக்கிறார் என்ற தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டனர். இது தற்கொலையா? கொலையா? என்று அவர்களுக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டனர்.

இளைஞர் வறண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று இந்த கிணற்றில் வீசி விட்டனரா? என்று காவலாளர்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

click me!