இரண்டாவது நாளாக விடாது பெய்த கனமழை; அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 37 மிமி மழைப்பதிவு…

 
Published : Jan 28, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
இரண்டாவது நாளாக விடாது பெய்த கனமழை; அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 37 மிமி மழைப்பதிவு…

சுருக்கம்

புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்ததில், ஆவுடையார்கோவிலில் அதிகபட்சமாக 37 மிமி மழைப் பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும், இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வந்தது.

வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் இளநீர், கறும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மேலும் வாகன ஓட்டுனர்கள் முகத்தை மூடியவாறு சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளன. நேற்று காலையும் மழை தாரளாமாகவே பெய்தது. இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகளும் களிகூர்ந்தனர்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், நாகுடி, ஆயிங்குடி பகுதிகளிலும் மழை பரவலாக பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

ஆதனக்கோட்டை - 4 மிமி, பெருநல்லூர் - 6 மிமி, புதுக்கோட்டை - 2 மிமி, ஆலங்குடி - 3 மிமி, அறந்தாங்கி - 5 மிமி, ஆயிங்குடி - 17 மிமி, நாகுடி - 25 மிமி, மீமிசல் – 3 மிமி, ஆவுடையார்கோவில் - 37 மிமி, கந்தர்வகோட்டை - 5 மிமி, இலுப்பூர்- 2 மிமி, அன்னவாசல் - 3 மிமி, கறம்பக்குடி - 17 மிமி, மழையூர் - 8 மிமி, உடையாளிப்பட்டி - 6 மிமி, கீரனூர் - 4 மிமி, மணமேல்குடி - 5 மிமி, கீழாநிலை - 11 மிமி, திருமயம் - 2 மிமி, அரிமளம் - 5 மிமி மழையும் பெய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்