தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: கட்டாயமாக பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு

 
Published : Nov 24, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: கட்டாயமாக பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

The priority in employment for educated students in Tamil course The court order is mandatory to follow

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு, தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேர்வு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த  திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில், தான் முதுநிலை வரை தமிழில் படித்ததால், தனக்கு வேலை வழங்கப் படவில்லை என கூறியிருந்தார். 

செந்தில்குமாரின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை என்ற உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்