திண்டுக்கல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் ரெய்டு - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி...

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
திண்டுக்கல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் ரெய்டு - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி...

சுருக்கம்

The police have been conducting a raid at the Dindigul Regional Transport Office where a bribe of bribe was received by the intermediaries.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து, அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாகன உரிமப் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும், இடைத் தரகர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தன. 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீரென திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு இருந்த இடைத்தரகர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில், சசிக்குமார் என்ற இடைத்தரகரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

இதைதொடர்ந்து பிடிபட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?
தம்பதியை சுத்துப்போட்ட போலீஸ்! வாகன சோதனை சிக்கிய ரூ.1.18 கோடி ஹவாலா பணம்! நடந்தது என்ன?