வீடு புகுந்து அடுத்தவர் மனைவிக்கு பாலியல் தொந்தரவு - டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்...!

First Published Sep 22, 2017, 9:30 PM IST
Highlights
The incident took place at Karur near the house where a woman was raped and was raped.


கரூர் அருகே இரவு வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த பெண்ணிற்கு வீடு புகுந்து ஒருவர் பாலியல் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தெலுங்குபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் எல்ஐசி ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதியினர் இரவு தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவர் வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த தமிழ்செல்விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

உடனே தமிழ்செல்வி அலறியதும் எழுந்த பழனிசாமியை அம்மாசி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதுகுறித்து போலீசாரிடம் பழனிசாமி புகார் அளித்துள்ளார். தகவலறிந்த அம்மாசி ஆட்கள் புகாரை திரும்ப பெற வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் புகாரை திரும்ப பெற்றனர். 

இந்நிலையில், தன்னை கட்டப்பஞ்சாயத்து கும்பல் வழிமறித்து, இந்த பிரச்னையை இதோடு விட்டுவிட வேண்டும் என்று மிரட்டியதாகவும்,  மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அம்மாசி மீதும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் டி.எஸ்.பி அலுவலகத்தில் பழனிசாமி புகார் அளித்துள்ளார். 

click me!