பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை - உடல்களை தேடும் பணி தீவிரம்...!

Asianet News Tamil  
Published : Nov 24, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை - உடல்களை தேடும் பணி தீவிரம்...!

சுருக்கம்

The incident that has resulted in the death of 4 schoolchildren jumped into the well near Arakkonam.

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவிகள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகியோர் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். 

இன்று காலை முதலே அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர். 

இதையடுத்து மதியம் வீடு திரும்பாததால் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ராமாபுரம் பகுதியில் விசாரணை நடத்திய போது 4 மாணவிகள் சுற்றி திரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், மதியம் 12 மணி அளவில் மாணவிகள் 4 பேர் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில், தீபா, சங்கரி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 2 மாணவிகளின் உடல்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆசிரியர் திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 
 

PREV
click me!

Recommended Stories

New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
சமூக அவலங்களுக்கு எதிரான AIYF கையெழுத்து இயக்கம்! தொல். திருமாவளவன்