பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை - உடல்களை தேடும் பணி தீவிரம்...!

 
Published : Nov 24, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை - உடல்களை தேடும் பணி தீவிரம்...!

சுருக்கம்

The incident that has resulted in the death of 4 schoolchildren jumped into the well near Arakkonam.

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவிகள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகியோர் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். 

இன்று காலை முதலே அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர். 

இதையடுத்து மதியம் வீடு திரும்பாததால் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ராமாபுரம் பகுதியில் விசாரணை நடத்திய போது 4 மாணவிகள் சுற்றி திரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், மதியம் 12 மணி அளவில் மாணவிகள் 4 பேர் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில், தீபா, சங்கரி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 2 மாணவிகளின் உடல்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆசிரியர் திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 
 

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி